எங்களைப் பற்றி

எங்களைப் பற்றி

தேவர் என்பது முக்குலத்தோரின் முதன்மையான பட்டங்களில் ஒன்று. முக்குலத்தோரில் கள்ளர், மறவர், அகமுடையார் என்பதே சாதி. தேவர் என்பது "தெய்வீக இயல்புடையவர்கள்" என்றும், முக்குலத்தோர் என்றால் "மூன்று குலங்கள் ஒன்றிணைந்தன" என்றும் பொருள் ஆகும்.
தே < தேன் = இனிமை
தே < தேன் - உயரத்தில் இருக்கும் பொருள்
இந்த வகையில் 'தே' என்னும் வேர்ச்சொல் இனிமையையும், உயர்வையும் குறிக்கும். தே+அர்=தேவர், எனவே தேவர் என்னும் சொல் 'உயர்ந்தவர்', 'இனியவர்' என்னும் பொருள்களின் அடிப்படையில் தோன்றியது.

கள்ளர், அகமுடையார் , மறவர் ஆகிய மூன்று சமூகத்தினரான இவர்களை மூன்று குலத்தவர்களாகக் கொண்டு முக்குலத்தோர் என்றும் பொதுவாக ராஜகுலத்தினர் என்று பொருள்படும் சமசுகிருத சொல் “தேவர்” என்று அழைக்கபடுகிறார்கள். 
 

தேவர்கள் 1891ல் இந்தியாவின் முதல் சாதிவாரி கணக்கெடுப்பில் தமிழ் போர்க்குடிகள் என்று ஆங்கிலேயர்கள் வகைபடுத்தினர், ஆங்கிலேயர்களை கடுமையாக எதிர்த்து போர் புரிந்து, அவர்களிடம் ஆட்சியை இழந்து தேவர்கள் சிதறி போனார்கள்.

மூவேந்தர்களின் ஆட்சிக்குபின் அவர்களின் வழி வந்த முக்குலத்தோர்  சிற்றரசர்களாக இருந்தனர். இவர்களிடம் ஒற்றுமையின்மையால், விசயநகர ஆட்சிக்காலத்தில் பாளையக்காரர்களா  மாற்றப்பட்டனர். பின்பும் ஒற்றுமையின்மையால் ஆங்கிலேய ஆட்சிகாலத்தில் ஜமீன்களாக ஒடுக்கப்பட்டனர். இங்கே படையெடுத்து வந்த முகமதியர், விசயநகர மன்னர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள், டச்சு, பிரஞ்சு மற்றும் ஆங்கிலேயருக்க எதிரான போர்களில் ஈடுபட்டதற்கான வரலாற்று ஆதாரங்கள் 70% க்கு மேலாக ஆதாரங்கள் முக்குலத்தோருக்கே உள்ளது. 

மூவேந்தர்களுக்கு பிறகு இங்கு இருந்த தமிழ் மன்னர்களில் சேதுபதி மன்னரும், தொண்டைமான் மன்னரும், மருது பாண்டியர்களும் முக்கியமானவர்கள். 

கிழவன் சேதுபதி மன்னரே சிறந்து விளங்கியவர்.